×

புகையிலை, போலி சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்

ஓசூர், பிப்.9:  ஓசூர் அட்கோ பகுதியில், புகையிலை மற்றும் போலி சிகரெட் பாக்கெட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெய் சந்திர பானு ரெட்டி மற்றும் எஸ்பி பண்டிகங்காதர் உத்தரவின் பேரில், ஓசூர் டவுன் காவல் நிலையம் மற்றும் ஹட்கோ காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஓசூர்  உணவுப் பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையில், தனிப்பிரிவு எஸ்ஐ குமுதா மற்றும் 4 போலீசார் அடங்கிய அலுவலர்கள், திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் ₹50 ஆயிரம் மதிப்பில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்மசாலா புகையிலைப் பொருட்கள் மற்றும் ₹40 ஆயிரம் மதிப்புள்ள போலி சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் 13 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட பொருட்களை விற்ற 5 பேருக்கு ₹13 ஆயிரம் அபராதம் விதித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பான்பராக், பான்மசாலா மற்றும் போலி சிகரெட் பாக்கெட்டுகளை விற்ற வியாபாரிகள் 2 பேரை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

Tags :
× RELATED சுயமரியாதை இயக்க விழா பொதுக்கூட்டம்